Sunday, May 11, 2008

கண்ணொளி தந்த ஈசர் -3

அதிகார நந்தியில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரின்

அற்புத சேவை




வெள்ளீஸ்வரம் வைகாசிப் பெருவிழா
இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி பெருந்திருவிழாவைப் பற்றிக் காண்போம். கபாலீச்சுரத்தைப் போலவே இத்தலத்திலும் காலை மாலை இரு வேளைகளிலும் எழுந்தருளி அருள் பாலிப்பவர்கள் பஞ்ச மூர்த்திகளே. இனி சுருக்கமாக பெருவிழா நிகழ்ச்சிகள் பற்றி பார்ப்போம். உற்சவ தொடக்கமாக தீர்த்தாம் பட்தரையில் புற்று மண் எடுக்கும் விழா மாலை சண்டேசுரர் பெரிய மாட விதி புறபாடு அருள்மிகு செல்வ விநாயகர் உற்சவம், முதல் நாள் கொடியேற்று மண்டபத்திற்கு பவளக் கால் விமானத்தில் எழுந்தருளி கொடியேற்றம். இரவு ஸ்தல விரிட்சமாம் குருந்த விருட்சத்தின் அடியில் சுக்கிராச்சாரியார் சிவ பூஜை செய்யும் கோலம். இரண்டாம் நாள் காலை சூரிய வட்டம், மாலை சந்திரப்பிறை, மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவை, விநாயகர் மூஷிக வாகனத்திலும், ஐயன் அதிகார நந்தியிலும், காமாக்ஷி அம்பாள் கந்தருவி வாகனத்திலும், முருகர் கந்தருவன் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள் விடை வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இரவு பூத வாகனம். நான்காம் நாள் காலை புருஷா மிருக வாகனம், அம்மை நாக வாகனம், முருகர் ஆடு வாகனம். ஐந்தாம் நாள் காலை சவுடல் விமானம் பெருவிழாக்காட்சி, இரவு வெண்விடை பெருவிழாக் காட்சி( ரிஷ்ப வாகனம்). ஆறாம் நாள் காலை பல்லக்கு விழா, இரவு யானை வாகனம், ஏழாம் நாள் திருத்தேரோட்டம். எட்டாம் நாள் மதியம் சுக்கிரபகவான் திருமுழுக்கு, மதியம் சுக்கிர பகவான் கண் பெறுதல், பிரம்மா, விஷ்ணு கருட சேவை இவர்களுடன் வெள்ளீசுவரர் திருக்காட்சியருளல். சந்திரசேகரர் பரிவேட்டை. ஒன்பதாம் நாள் மாலை பிக்ஷ்டாணர் கோல விழா. பத்தாம் நாள் நடராசர் உற்சவம், தீர்த்தவாரி இரவு திருக்கல்யாணப் பெருவிழா. கொடியிறக்கம் சண்டேஸ்வரர் திருவிழா. பதினொன்றாம் நாள் காலை உமாமகேஸ்வரர் விஸ்வரூப தரிசனம், இரவு பந்தம்பறி விழா, பன்னிரண்டாம் நாள் உற்சவ சாந்தி அபிஷேகம் பத்து நாட்கள் விடையாற்றி விழா தொடக்கம், உற்சவ களைப்பு நீங்க இன்னிசை கேட்டு மகிழ்கிறார் வெள்ளீஸ்வரர். இத்திருவிழாவிம் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி சேவையின் அருட்காட்சிக்ளை கண்டு களியுங்கள்.



மூஷிக வாகனத்தில் செல்வ விநாயகர்


கந்தர்வி வாகனத்தில் காமாக்ஷி அம்பாள்
வெள்ளீஸ்வரர் அதிகார நந்தி சேவை
கந்தர்வன் வாகனத்தில் முத்துகுமார சுவாமி

கலைமகளையும் அலை மகளையும் கண்களாக் கொண்டு கடாக்ஷிக்கும்

காமாக்ஷி அன்னையிம் எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்
எழிற் குமரன் தேவியருடன்


சண்டிகேஸ்வரர் ரிஷ்ப வாகன சேவை

அடுத்த பதிவில் மும்மூர்த்திகளிம் தரிசனம் காண்போம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home