கண்ணொளி தந்த ஈசர் -4
பொழிலளந்த புள்ளூர்தி செல்வராக உலகந்த பெருமாள்
இத்துடன் திருமயிலை வெள்ளீஸ்வரத்தின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன.
Mylapore is one of the temples of Tamilnadu dedicated to Lord Shiva, glorified by saints. Situated in Chennai the temple has many glories, the blog comprises of legends associated with this temple and photos of festival held in this temple. "காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி" என்று பாபநாசன் சிவன் பாடிப்பரவிய கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கோலங்கள்
பொழிலளந்த புள்ளூர்தி செல்வராக உலகந்த பெருமாள்
இத்துடன் திருமயிலை வெள்ளீஸ்வரத்தின் பதிவுகள் நிறைவு பெறுகின்றன.
மூஷிக வாகனத்தில் செல்வ விநாயகர்
அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மந்த்காச புன்னகையுடன், லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய இருவரையும் கண்களாகக் கொண்ட அம்பாள் கருணையுடன் நம்மை நோக்கி, அங்குசம், பாசம், அபய, வரத கரங்களுடன் நின்ற காலத்தில் எழிலாக அருட்காட்சி தருகின்றாள் காமாக்ஷி அம்பாள். காஞ்சி காம கோடி கருணா விலாசினி இங்கே சென்னையில் நமக்காக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். ஜகன்மாதா, அன்னபூரணி, ஜகத் ஜனனி அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கி வலம் வந்தால் மற்ற உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம், ஆடல் வல்லானின் பனித்த சடையில் சந்திரப்பிறை அழகு என்றால், சுந்தர பிக்ஷ்டாணர் மூர்த்த்தில் மான் அழகு பின்னம் கால்களில் நின்று முன்னங்கால்களை மடக்கி நின்ற கோலத்தில், முனி பத்தினிகள் பார்த்து மயங்கிய அந்த சுந்தர வதனத்தை தரிசிக்கும் வகையாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளந்த பெருமாள், வாமனர், ஆறுமுகர், நால்வர் பெருமக்கள், சுக்கிராச்சாரியார், மஹாபலி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் ஆகியோரின் மூர்த்தங்களும் உள்ளன. அடுத்து தெற்கு நோக்கிய அம்பலம் அதில் ஆனந்த நதம் புரியும் அம்பல வாணர் அருட்காட்சி அம்மை சிவகாமியும் உடன் அருள் பாலிக்க்கின்றாள்.
மஹா திரிபுர சுந்தரி
காமாக்ஷி அம்பாள்
பின் வெளியே வந்தால் சுக்கிரேஸ்வரர் மற்றும் சரபேஸ்வரர் சன்னதி. சுக்கிரேஸ்வரர் சன்னதியில் இத்தல ஐதீகமான குருந்த மரத்தடியில் சுக்கிராச்சாரியார் சிவ பூஜை செய்யும் கோலத்தை காணலாம் . சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சரபேஸ்வரின் சன்னதியில் ராகு காலங்களில் பக்தர்கள் குவிகின்றனர். சரபர் மனிதன், யாளி,பக்ஷி மூன்றும் கலந்த உருவம். பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் இரணியனை வதம் செய்த பின்னரும் உக்ரம் அடங்காமல் சுற்றி வந்ததால் அவரது உக்ரத்தை அடக்கி சாந்தப்படுத்த சிவபெருமான் எடுத்த உருவமே சரபேஸ்வரர். சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று கண்களும், நகங்கள் வஜ்ராயுதம் போலவும், வடவாமுகாக்னி, பைரவை இவர்களை தன் வயிற்றில் ஜடாக்னியாக அடக்கி, மான், மழு, பாம்பு, அக்னி, திருக்கரங்களில் தாங்கி, யாளி முகத்துடனும். பிரத்தியங்கிரா, சூலினி துர்க்கை ஆகியோரை இறக்கைகளாகக் கொண்டு, ரோக தேவதைகளையும், யமனையும் தொடைகளாகக் கொண்டு, சிரசில் பிறை, கங்கை விளங்க எட்டுக்கால்கள், நான்கு கைகள், கருடனைப்போன்ற அலகு, சிங்க வால், தெற்றுப்பல, காலில் நரசிம்மரை சாந்திப்படுத்தும் கோலத்துடன் கம்பீரமாக கற்பனையிலும் நினைக்க முடியாத உருவுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் சரபேஸ்வரர். தடைகள் மன்க்கலக்கம். வியாதிகள் ஆகியவற்றை களைந்து எதிர்களே இல்லாத அருளைத்தரும் சத்ரு நாசகர் ஸ்ரீ சரபேஸ்வ்ரர். இராகு காலத்தில் இவரை வழிபட்டால் ஏவல். பில்லி, சூனியம், தீராத ம்னோ வியாதி, தேவை இல்லாத பயம் தீராத நோய்கள். வறுமை, நம்மை ஆட்டிப்படைக்கும் கண்ணிற்கு தெரியாத துஷ்ட தீய சக்திகள் போன்றவைகள் நீங்கும்.பேதமற்ற மூர்த்தியான இவரை வணங்குவதால் இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்கள் (புயல், இடி, மின்னல்) பாதிக்காது. ஞாயிற்றுக்க்கிழமைகளில் இராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன இவருக்கு.
திருத்தேரில் வெள்ளீஸ்வரர்
அடுத்து கொடிமரம் மற்றும் பலி பீடம், கொடிமரத்திற்கு வலப்புறம் கொடியேற்று மண்டபம். இங்கு அலங்கார மண்டபம் மற்றும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.
வெண் விடையில் சண்டிகேஸ்வரர்
கண்ணொளி தந்த ஈசர் வெள்ளீஸ்வரர்
திருமயிலை, மயிலப்பூர், மயூபுரி என்றெல்லாம் அழைக்கபப்டும் தலத்தில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலை அனைவரும் அறிவர், ஆனால் கயிலையே மயிலை எனப்படும் திரும்யிலையில் இன்னும் ஆறு சிவாலயங்கள் உள்ளன என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை. காணக்கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று பாபனாசம் சிவன் பாடிய கபாலீஸ்வரர் பவனி வரும் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளீஸ்வரம்.
இத்தலத்தின் பெருவிழா வைகாசி பௌர்ணமி நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பத்து நாள் திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடபடுகின்றது. பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை பிரதோஷ காலத்தில் ஸ்தல ஐதீகமான சுக்கிராச்சாரியாருக்கு சிவ பெருமான் கண்ணொளி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகராக சிவபெருமானும் கருட வாகனத்தில் உலகளந்த பெருமாளாக மஹா விஷ்ணுவும், பவளக் கால் விமானத்தில் பிரம்மாவும் எழுந்தருளி சுக்கிராச்சாரியாருக்கு அருள் பாலிக்கின்றனர். இந்த அற்புத விழாவின் சிறு துளிகளை அன்பர்களிடம் சேர்க்கும் முயற்சியே இப்பதிவு.
காமாக்ஷி அம்மன் பத்மாசனி கோலத்தில்