திருமயிலை அறுபத்து மூவர் திருவிழா -2
இந்த பதிவிற்காக தாங்கள் LOGAN ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும். என்ன ஆயிற்று கடந்த மூன்று மாதங்களாக பதிவுகள் ஒன்றும் வரவில்லையே என்று பின்னூட்டம் இட்டிருந்தார் அவர்.
செப்டெம்பர் மாதம் யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத் யாத்திரை, பின்னர் டிசம்பர் மாதம் நவ பிருந்தாவனம், மந்திராலயம் யாத்திரை பின் வீட்டில் ஒரு விஷேசம் என்று இருப்பதாலும், இமயமலையின் இனிய பயணத்தைப் பற்றிய கட்டுரையை எழுதி வருவதாலும் சமயம் குறைவாக இருப்பதால் பதிவிட முடியவில்லை.
பதிவிடுதலை நிறுத்தி விடும் எண்ணம் இல்லை. முடிந்த அவனருளால் அவன் தரும் தரிசனங்களை அன்பர்களாகிய தங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள அவன் அருள் புரியட்டும்.
கபாலீஸ்வர சுவாமியின் பின்னழகு


இந்தப் பதிவின் ஒரு சிறப்பு அம்சம் இப்படங்கள் அனைத்தும் இரவில் எடுக்கப்பட்டவை. எப்போதும் அறுபத்து மூவர் திருவிழாவை இதுவரை பகலில் தரிசனம் செய்யும் பாக்கியம்தான் கிட்டியுள்ளது சிவசக்தியின் அருளால் இந்த வருடம் இரவில் வடக்கு மாட வீதியில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. மின்னொளியில் பஞ்ச மூர்த்திகளும் மற்ற தெய்வங்களும் அற்புத காட்சி தங்கள் முன்னே.
வள்ளி தெய்வாணை உடனுறை சிங்கார வேலவர்


அழகன் முருகனின் பின்னழகு

பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர்


சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்

முத்துக்குமரன் பின்னழகு

வள்ளுவரும் வாசுகியும்

மயிலையிலே கோயில் கொண்டாய் முண்டக கண்ணியம்மா

Labels: சிங்கார வேலவர், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், முண்டக கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home