Tuesday, June 5, 2007

THIRU MYLAI KAPALEESWARAM - 4

Till now you witnessed the great spectacle of the year 2007's festival. Please visit in future to read about the history of this temple and also the photos of yester years festivals.
இதுவரை 2007 வருடத்திய திருக்கோலத்தை தரிசனம் செய்தீர்கள், இத்தலத்தின் வரலாறு, மற்றும் மற்ற ஆண்டுகளின் தரிசனம் இனி வரும் இடுகைகளில் அவசியம் மறுபடியும் வந்து கண்டு களியுங்கள்.
THE ARUPATHU MOOVAR FESTIVAL OF MYLAPORE
8th day evening of 10 day festival
Mundaka Kanni Amman
மயிலையிலே கோவில் கொண்ட
கோல விழி அம்மன்

Thraupathy Amman
திரௌபதி அம்மன்

Chinthathripet Murugar
சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து மயிலை வந்த
முத்துக்குமரன்



Thiruvalluvar with Vasuki

உலகப் பொது மறை திருக்குறள் அருளிய
திருவள்ளுவரும் வாசுகியும்



Singaravelavar in Vimanam giving darshan to 63 Nayanmars

வள்ளி தெய்வானை சமேத
சிங்கார வேலவர்
அறுபத்து மூவருக்கு சேவை

Amba Karpagavalli giving darshan to 63 Nayanmars (close up)

கற்பகாம்பாள்


அறுபத்து மூவருக்கு அருட்காட்சி தரும்

விரைமலர்க் குழல் வல்லி
மறைமலர்ப் பத வல்லி
விமலி கற்பகவல்லி





Kapaleeswarar in Silver Vimanam giving darshan to 63 Nayanmars

வெள்ளி விமானத்தில் அறுபத்து மூவருக்கும்
அருட்காட்சி தரும் கபாலீஸ்வரர்



The Great evening spectacle of Arupathu Moovar fetival.

(The temple tower of Velliswarar temple)



அறுபத்து மூவர் இரம்மியமான
மாலை தரிசனம்
(வெள்ளீஸ்வரர் விமானம்)



அறுபத்து மூவரில் நால்வர்(9 )


அறுபத்து மூவரில் நால்வர்(8 )
href="http://bp0.blogger.com/_ADwJgwfepSw/Rm4kVruOonI/AAAAAAAAANg/bXQAE8VR08M/s1600-h/mylai37.JPG">

அறுபத்து மூவரில் நால்வர்(7 )

href="http://bp1.blogger.com/_ADwJgwfepSw/Rm4jn7uOolI/AAAAAAAAANQ/w21pThpp_-E/s1600-h/mylai35.JPG">
அறுபத்து மூவரில் நால்வர்(6 )

அறுபத்து மூவரில் நால்வர்(5 )


அறுபத்து மூவரில் நால்வர்(4 )

அறுபத்து மூவரில் நால்வர்(3 )



அறுபத்து மூவரில் நால்வர்(2)


அறுபத்து மூவரில் நால்வர்(1 )
Thirugnana Sambabdar who turned ashes into a lady.

பதிகம் பாடி என்பைப் பெண்ணாக்கிய
ஆளுடையப் பிள்ளை
திருஞான சம்பந்தர்


பூம்பாவையின் தந்தை சிவநேசர்
Sivanesar father of Angam Poompavai

என்பாயிருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை
Angam Poompavai
The lady who came out of Ashes by the Lord's Grace



Sri Ganesha leading the Arupathu Moovar
அறுபத்து மூவர் திருவிழாவில் முதலில்
முழுமுதற் கடவுள் விநாயகர்

One of the legends of this great temple is the miracle done by ThirugnanaSambandar who turned ashes into a lady by singing in praise of Lord Shiva at Kapaleeswaram. To commemerate this every year this festival is celebrated. You are witnessinf that great festival in this post. The legend is will be explained in future post.

எட்டாம் நாள் மாலை பிரதோஷ காலத்தில் பஞ்ச மூர்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அருட்காட்சி தருகின்றனர். பங்குனிப் பெரு விழாவின் சிகரமான இந்த "அறுபத்து மூவர் விழாவின் " அற்புத காட்சிகள் இந்த இடுகையில்.
அரவம் தீண்டி மாண்டு என்பான பூம்பாவையை அம்மையின் ஞானப் பாலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் ஆண்டவன் மேல் பதிகம் பாடி உயிருடன் எழுப்பிய அந்த அற்புதத்தை போற்றும் வகையில் பூம்பாவை, சிவநேச செட்டியார், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் முதலியோர் பல்லக்கிலும், மற்ற நாயன்மார்கள் நால்வர் நால்வராக பவளக் கால் விமானத்திலும் பஞ்ச மூர்த்திகளை எதிர் கொண்டு , வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும், கற்பகாம்பாள், சிங்கார வேலவர், சண்டிகேஸ்வரர் மற்ற விமானங்களில் பவனி வர, மயிலையின் மற்ற தெய்வங்களான அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், திருவள்ளுவர் வாசுகியுடன், சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து முத்துக்குமரன் என்று மாடவீதிகள் முழுவதும் மக்கள் வெள்ளமாக கூட்டம் கூடியிருக்க, அன்பர்கள் தண்ணீர்,நீர் மோர், பிரசாதம் என்று வழங்க எம்பெருமான் பவனி வரும் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. முடிந்த வரை புகைப்படங்களின் மூலம் அந்த அற்புத அழகை அன்பர்களிடம் சேர்பிக்கும் முயற்சியே இந்த இடுகை.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home